search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்ட நெரிசல்"

    • புதிய படம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகும்.
    • ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல்.

    பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகை தினத்தில் தனது வீட்டின் முன் கூடும் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். மேலும், இவரது புதிய படம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாவது வாடிக்கையான விஷயம் தான்.

    அந்த வகையில், ரம்ஜான் பண்டிகை நாளான (ஏப்ரல் 11) இன்று சல்மான் கானுக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமான ரசிகர்கள் மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன் கூடினர். ஒரே சமயத்தில் ஏராளமான ரசிகர்கள் வீட்டின் முன் ஒன்று கூடியதால், அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர். எனினும், காவலர்களால் ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவானதாக தெரிகிறது.

    ஒரு கட்டத்தில் கூட்டம் தொடர்ந்து அதிகரிக்க காவலர்கள் தடியடி நடத்தி ரசிகர்களை அங்கிருந்து கலைந்து போக வலியுறுத்தினர். ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நடிகருக்கு வாழ்த்து தெரிவிக்க கூடிய ரசிகர்கள் மீது தடியடி நடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    முன்னதாக ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சல்மான் கான் நடிக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் புதிய படத்திற்கு "சிக்கந்தர்" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.



    • ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் லட்சுமி சாய் சந்தோஷ் (வயது 21). இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த பார்கவ் என்பவருக்கும் கடந்த 23-ந் தேதி திருமணம் நடந்தது.

    இந்நிலையில் 27-ந் தேதி லட்சுமி சாய் சந்தோஷ் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசிக்க வந்தனர்.

    நேற்று முன்தினம் மாலை வரிசையில் சென்றனர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்தது. ஏழுமலையானை தரிசித்து விட்டு தங்கம் மண்டபம் அருகே புதுமணப் பெண் நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் லட்சுமி சாய் சந்தோஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து லட்சுமி சாயின் பெற்றோர் கூறுகையில்:-

    அவருக்கு சிறு வயது முதலே சுவாசக் கோளாறு இருந்ததாகவும், கூட்ட நெரிசலில் தரிசனத்திற்கு வந்ததால் மயங்கி விழுந்து இறந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பிணத்தை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் புது மணப்பெண் அணிந்து இருந்த தங்க நகைகள் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொச்சி அருகே களமசேரி பகுதியில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது.
    • பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்றதாக தெரிகிறது.

    கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கொச்சி அருகே களமசேரி பகுதியில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது.

    இங்கு நடைபெற்ற விழாவில் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்றதாக தெரிகிறது. மேலும், மாணவர்கள் அல்லாதோரும் ஏராளமானோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அரங்கம் நிரம்பி வழிந்த நிலையில், அரங்கிற்கு வெளியேயும் அதிக அளவிலானோர் நின்று கொண்டிருந்தனர்.

    திடீரென மழை பெய்ததால் அரங்கத்திற்கு வெளியே இருந்தவர்கள், உள்ளே நுழைந்ததால் கூட்ட நெரிசலால் விபத்து ஏற்பட்டுள்ளது.

    கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் சில தினங்களே உள்ளது.
    • கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்,

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர்- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 12-ம் தேதி ஆகிய 2 நாட்கள் இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.06001) தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ஊர்களின் வழியாக தூத்துக்குடிக்கு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்றடையும்.மறுமார்க்கமாக 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு (வண்டி எண்.06002) மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு செல்லும்.

    மேற்கண்ட தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பழனி நகரில் அடிவாரம், கிரிவீதி, ஆர்.எப்.ரோடு உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் நெரிசலான பகுதியாக உள்ளது.
    • கயிறு கட்டிய இடத்தை கடந்து வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடி க்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    பழனி:

    பழனி நகரில் அடிவாரம், கிரிவீதி, ஆர்.எப்.ரோடு உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் நெரிசலான பகுதியாக உள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவ தால் மாலைநேரங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    ஜவுளி கடைகள் அதிகம் உள்ள ஆர்.எப். ரோடு பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலை யோர ஆக்கிரமிப்புகளும் அதிக அளவில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆர்.எப். ரோடு பகுதியில் வாகனங்கள் நிறுத்த கயிறு கட்டி இடம் கொடுக்க ப்பட்டது. அந்த இடத்தை கடந்து வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடி க்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை கடந்து ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது.

    தீபாவளி பண்டிகை வரை பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூரின்றி வியாபாரிகள் வியாபாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

    • வார இறுதி நாட்கள் மற்றும் தினமும் மாலை நேரங்களில் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
    • மக்கள் வருகைக்காக நிறைய பொருட்களை வியாபாரத்துக்கு வர்த்தகர்கள் கடைகளில் நிரப்பி உள்ளனர்.

    திருப்பூர்:

    வருகிற 23-ந்தேதி சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ளது.இதனால் வார இறுதி நாட்கள் மற்றும் தினமும் மாலை நேரங்களில் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் பிரதான சாலைகளான புது மார்க்கெட் வீதி, குமரன் ரோடு, காதர்பேட்டை, பி.என்., ரோடு, பல்லடம், காங்கயம் ரோடுகளில் ஜவுளி, மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், மொபைல் போன் கடைகள் உட்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் மெல்ல, மெல்ல கூட்டம் அதிகமாகி வருகிறது.

    மக்கள் வருகைக்காக நிறைய பொருட்களை வியாபாரத்துக்கு வர்த்தகர்கள் கடைகளில் நிரப்பி உள்ளனர். தற்காலிக துணி, பலகார கடைகள், நடைபாதை கடைகள் முளைத்துள்ளன. நாளை முதல் குமரன் ரோடு உள்ளிட்ட ரோடுகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சீராக வாகனங்கள் செல்லும் வகையில் போலீசார் ஆலோசனை செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    தீபாவளியையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் போது, பயணிகள் எளிதாக நின்று ஏறும் வகையில், தற்காலிக பஸ் நிலையம் ஏற்படுத்துவது, போக்குவரத்து மாற்றம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளுடன் மாநகர போலீசார் ஆலோசனை செய்து வருகின்றனர்.

    சமீபத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. போலீசார், வருவாய்துறை, போக்குவரத்து துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறையினர் பங்கேற்ற கூட்டம் நடந்தது.அதில், மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டது. தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி கொடுக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடக்கும் கூட்டங்களில் பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளது.

    இது குறித்து போலீசார் கூறுகையில், அதிகம் மக்கள் கூடும் இடத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட உள்ளது. கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. பிக்பாக்கெட், நகை பறிப்பு குற்றவாளிகளை கண்டறியும் வகையில் மக்கள் கூடும் இடம், பஸ்களில் மப்டி போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றனர்.

    • உடுமலை ரெயில் நிலையம் வழியாக தென்மாவட்டங்கள் மற்றும் பல்வேறு பகுதிக்கு விரைவு, பயணிகள் ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • முருகப்பெருமானுக்கு உரிய அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு செல்லும் பாலக்காடு- திருச்செந்தூர் ரெயில் உடுமலை பகுதி பொது மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது.

    உடுமலை:

    உடுமலை ரெயில் நிலையம் வழியாக தென்மாவட்டங்கள் மற்றும் பல்வேறு பகுதிக்கு விரைவு, பயணிகள் ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் குறைவான செலவில் மனநிறைவான பயணத்தை பாதுகாப்புடன் பெற்று பயனடைந்து வருகின்றனர்.குறிப்பாக முருகப்பெருமானுக்கு உரிய அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு செல்லும் பாலக்காடு- திருச்செந்தூர் ரெயில் உடுமலை பகுதி பொது மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது.

    பெளர்ணமி,கோடை ,பொது, வார விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு சென்று கடலில் குளித்து முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்துவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.அந்த வகையில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, மிலாடிநபி,காந்தி ஜெயந்தி என 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    இதனால் உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதி தொழிற்சாலை மற்றும் கோழிப்பண்ணை மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், திருச்செந்தூருக்கு செல்லும் பொதுமக்கள் திருச்செந்தூர் ரெயிலில் பயணம் செய்ய நேற்று குவிந்தனர்.இதனால் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.ஆனால் முன்பதிவு,தட்கல் மற்றும் முன்பதிவு இல்லாத பயணிச்சிட்டு வழங்குதல் என அனைத்து பணிகளுக்கும் ஒரு மையம் மட்டுமே உள்ளது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.ஒரு வழியாக டிக்கெட் எடுத்துக்கொண்டு ரெயிலில் ஏறிச் செல்லலாம் என்று நினைத்திருந்த பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

    ஏராளமான மக்கள் திரண்டதால் ரெயில் நிரம்பி வழிந்தது.இதனால் ரெயிலில் ஏறிச் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.திருச்செந்தூர் பாலக்காடு ரெயில் 20 பெட்டிகள் கொண்டதாக உள்ளது.அதனுடன் கூடுதல் பெட்டிகள் சேர்த்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அதேபோன்று கூடுதல் டிக்கெட் மையம் திறக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. எனவே தென்னக ரயில்வே நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி ெரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்தும் மற்றும் உடுமலை ெரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் மையத்தை திறந்து வைக்கவும் முன்வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தலைநகர் அன்டனானரிவோவில் பரியா மைதானம் அமைந்துள்ளது.
    • மைதானத்தில் சுமார் 50,000 பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.

    அன்டனானரிவோ:

    மடகாஸ்கர் நாட்டின் தலைநகர் அன்டனானரிவோவில் பரியா மைதானம் அமைந்துள்ளது. அங்கு நேற்று விளையாட்டு போட்டி ஒன்றின் தொடக்க விழா நடைபெற்றது. இதைக் காண சுமார் 50,000 பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.

    அப்போது, மைதானத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர் என்றும், 80 பேர் வரை காயம் அடைந்துள்ளனர் என்றும், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே தெரிவித்துள்ளார்.

    கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

    மைதானத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வீடியோ 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்தியாவில் ரெயில் போக்குவரத்து ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. இதனால் விடுமுறை காலங்களில் ரெயில்களில் கூட்டம் அலைமோதி காணப்படும். இந்நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் ஒரு வீடியோவில் நெரிசல் மிகுந்த ரெயிலில் பயணித்த ஒருவர் கஷ்டப்பட்டு கழிவறைக்கு செல்வது போன்ற காட்சிகள் உள்ளது.

    இந்த சம்பவம் தேவகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபிஜித் டிப்கே என்பவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் அவரது உறவினர் ஒருவர் அவுரங்காபாத்தில் இருந்து மும்பைக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.

    அதிகாலை 2 மணிக்கு அவர் கழிவறைக்கு செல்ல முயன்ற போது ரெயில் பெட்டி முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. பெட்டியின் தரையிலும் பயணிகள் அதிகளவில் அமர்ந்திருந்ததால் அவரால் கழிவறைக்கு செல்ல முடியாத நிலையில் அவர் பெர்த்கள் மீது ஏறி ஒவ்வொரு சீட்டையும் கடந்து கஷ்டப்பட்டு கழிவறைக்கு செல்லும் காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இதை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ரெயில் பயணத்தை ஒரு சாகச விளையாட்டாக மாற்றியதற்கு ரெயில்வேக்கு நன்றி என ஒரு பயனர் கிண்டல் செய்துள்ளார். மேலும் சில பயனர்கள் தாங்களும் இதுபோன்ற சூழ்நிலையை பலமுறை எதிர் கொண்டதாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.




    • மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒரு தனியார் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய வயது முதிர்ந்த 4 மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

    மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் இந்த அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இந்த ஆண்டு தைப்பொங்கல் திருநாளுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலையினை வழங்கி இருந்தால், இந்த தனியார் வழங்கும் இலவச சேலையினை வாங்க ஒரே சமயத்தில் சுமார் 1500 ஏழை மகளிர் குழுமியிருக்க மாட்டார்கள். கூட்ட நெரிசல் காரணமாக அப்பாவி ஏழை மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கவும் மாட்டார்கள்.

    நடந்தேறிய இந்தத் துன்ப நிகழ்வுக்குக் காரணமான அதிகாரிகள் மீதும், நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரசை வலியுறுத்துகிறேன்.

    நிர்வாகத் திறனற்ற இந்த அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் காலதாமதத்தாலும், அலட்சியத்தாலும் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இந்த அரசு அறிவித்த நிவாரணத்தை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    குறித்த காலத்தில் விலையில்லா வேட்டி, சேலையை வழங்காத இந்த திமுக அரசு தான் இந்த நிகழ்வுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இனியாவது இந்த அரசு விழித்துக் கொண்டு, இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கையுடன் நடத்துவதற்குத் தேவையான உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஜின்னா பாலம் அருகே இலவச வேட்டி- சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வருவாய் துறையினர் மற்றும் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச வேட்டி- சேலைகள் வழங்குவதாக தனியார் நிறுவனம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டது. அதன்படி, ஜின்னா பாலம் அருகே வேட்டி- சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இலவச வேட்டி-சேலை வாங்குவதற்காக 1000-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

    ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்படட்து. இதில் சிக்கி பெண்கள் பலர் மயக்கம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மயக்கமடைந்தவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த சிலருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இச்சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா விசாரணை மேற்கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் ஜல்லி நிறுவன உரிமையாளருமான ஐயப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

    • கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் பலர் மயக்கம் அடைந்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • மயக்கமடைந்தவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்குவதாக தனியார் நிறுவனம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டது. தகவலை தொடர்ந்து 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர்.

    ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் பலர் மயக்கம் அடைந்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மயக்கமடைந்தவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா விசாரணை மேற்கொண்டார்.

    ×